Sunday, May 12, 2019

வாராகி பன்னிரு திருநாமங்கள்


வாராகி பன்னிரு  திருநாமங்கள்

உபாசனையில்லாமல் வாராகியை வழிபடமுடியாதா என்று கேட்பவர்களுக்காக  இந்தப்போற்றி. வாராகியின் பன்னிரு திருநாமங்களைப் போற்றி இசைப்பதன் மூலம் அம்மன் அருளைப் பெறலாம்.
  
  ஐந்தாவ திடமிருக்கும் பஞ்சமியே போற்றி
    ஆணை தண்ட நாதாவே தளபதியே போற்றி
மந்தணங்கள்  கொண்டவளே சங்கேதா போற்றி
    வளர்காலம் ஆளும்சம யேஸ்வரியே  போற்றி
முந்துநெறி யாள்சமய சங்கேதா போற்றி
    முன்னிருக்கும் வாராகி போத்ரிணியே போற்றி
அம்மைசிவா வார்த்தாளி மஹாசேனா போற்றி
    ஆக்ஞாசக் ரேஸ்வரியே அரிக்கினியே போற்றி

(மந்தணம்- இரகசியம்)

No comments:

Post a Comment