வாராகி தாலாட்டு
ஆராத அமுதே என் அன்பே
தாலேலோ
அழகுமிகக் கொண்டவளே அரசி தாலேலோ
வாராகி வார்த்தாளி வரமே தாலேலோ
வராகமுகி வராகமுகி வடிவே தாலேலோ
வாராத செல்வமென வந்தாய் தாலேலோ
வாழ்விக்க வந்தவளே மகவே தாலேலோ
கூரான தந்தங்கள் கொண்டோய் தாலேலோ
குலம்விளங்க வந்தவளே கோவே தாலேலோ
அழகுமிகக் கொண்டவளே அரசி தாலேலோ
வாராகி வார்த்தாளி வரமே தாலேலோ
வராகமுகி வராகமுகி வடிவே தாலேலோ
வாராத செல்வமென வந்தாய் தாலேலோ
வாழ்விக்க வந்தவளே மகவே தாலேலோ
கூரான தந்தங்கள் கொண்டோய் தாலேலோ
குலம்விளங்க வந்தவளே கோவே தாலேலோ
அன்னைலலி தாம்பிகையின் செல்லம் தாலேலோ
ஆயுதங்கள் கையெடுக்கும் அருளே தாலேலோ
மின்னுமொளி கண்களிலே கொண்டோய் தாலேலோ
வேகமுடன் காலுதைக்கும் மின்னே தாலேலோ
சின்னதொரு தூளிக்குள் சேர்ந்தாய் தாலேலோ
திரிலோகம் வளர்சக்தி பெற்றோய் தாலேலோ
முன்னொளிரும் நெற்றிக்கண் கொண்டோய் தாலேலோ
முக்கண்ணி மோகினியே முத்தே தாலேலோ
ஆனைபலம் கொண்டவள்நீ ஆனாலும் கைக்குள்
அடங்கியொரு குழந்தையென ஆனாய் தாலேலோ
சேனைநடத் திடுவதென பொம்மைகளை யெல்லாம்
செப்பமுடன் அணிவகுக்கும் திருவே தாலேலோ
வானமழும் மண்ணுமழும் வளரண்ட மெல்லாம்
வருந்தியழும் நீயழுதால் அழவேண்டாம் கண்ணே
ஆனவிந்தை அண்டத்தைக் கிலுகிலுப்பை ஆக்கி
ஆட்டுகிறேன் நீகேட்டு மகிழ்வாய் என் கண்ணே!
பால்தருவேன் பழந்தருவேன் பரமே தாலேலோ
பாரடியில் கிழங்கெடுத்துத் தருவேன் தாலேலோ
கோல்தருவேன் உலக்கையென வைத்துக்கொள் பெண்ணே
கொடுங்கலப்பை வில்லம்பு நான்தருவேன் கண்ணே
மேல்சுழலும் சக்கரமும் கதையோடு பூவும்
விளையாட நான் தருவேன் ஆடிடுவாய் கண்ணே
கால்விரித்து நீபடுத்தால் துணிகிழிந்து போகும்
கால்மடக்கிப் படுத்துக்கொள் என்செல்லப் பெண்ணே!
உன்விழிகள் சிவப்பதுமேன் என்னருமைக்் கண்ணே
ஓங்குசினம் கொள்ளுவதேன் வாராகிப் பெண்ணே
உன்கழுத்தில் போடுதற்கு நவரத்ன மாலை
உனக்காக அனுப்பியுளாள் லலிதாம்பா தேவி
என்னயிது வரம்கொடுப்ப தென்ன உன்றன் கையை
இப்படிவைத் துள்ளாயோ, என் தெய்வம் நீயே
என்னரசி என் தெய்வம் இதமே தாலேலோ
எங்கள்குல நாயகியே இறையே தாலேலோ
தாலேலோ தாலேலோ ஓ தண்ட நாதா
தாலேலோ தாலேலோ
நீயெல்லாம் தாதா!
No comments:
Post a Comment