Friday, May 10, 2019


ஆதாரமாய்க் காக்கவே!
பதினான்கு சீர் விருத்தம்

எந்தவோர் தெய்வத்தைத் தொழுவதால் செய்கைகள்
         இடரின்றி நிறைவேறுமோ
       எந்தவோர் தெய்வத்தின் தோற்றத்தில் ஓங்காரம்
        எண்ணத்தில் மறைகூறுமோ
எந்தவோர் தெய்வதம் சுழுமுனை நாடியில்
        எழுயோக நிலை தேறுமோ
        எந்தவோர் தெய்வத்தின் அருளினால் குண்டலினி
       இறைஞான ஒளிகூடுமோ
எந்தவோர் தெய்வதம் அண்டபகி ரண்டங்கள்
        எல்லாமும் தம்வயிற்றுள்
        ஏற்றுப் புரக்குமோ இன்னருள் சுரக்குமோ
        எல்லாமுமாய் இருக்குமோ
அந்தவோர் தெய்வதம் ஆதிப்பரம்பொருள்
        ஆனந்தமாய்க் காக்கவே
       ஆனைமுகன் கணபதி ஞானவிழி நாயகன்
        ஆதாரமாய்க் காக்கவே!


No comments:

Post a Comment