உயர உயர
பதினான்குசீர் அசைச் சந்த விருத்தம்
திரிபு ரமமர் புரியச் சிவனும்
செலும்பொ ழுதினில் கணபதி
திருவ டிதனைத் தொழுதி டவிலை ரதமொ ருமுளை முறிந்தது
பெருகும் தனது தொழிலைப்
பிரமன் தொடங்கும் பொழுது மறந்திடப்
பிழைகள் படவே எடுபடும் உயிர் கெடுக ணமெனப் பெருகின
கருணை நிறையும் உமைதன் மகனைக்
கனிவொடு குறை யிறைஞ்சிடக்
கடிய தடையும் நொடியில் பொடியக் கருதும் செயலும் முடிந்தது
உருவக் களிறு பெரிய வயிறு
கணப தியருட் பெருமையை
உணர உணர உணரும் உயிரும் உயர உயர உயருமே!
No comments:
Post a Comment