Friday, May 10, 2019


உயர உயர

பதினான்குசீர் அசைச் சந்த விருத்தம்

திரிபு ரமமர் புரியச் சிவனும் செலும்பொ ழுதினில் கணபதி
திருவ டிதனைத் தொழுதி டவிலை ரதமொ ருமுளை முறிந்தது
பெருகும் தனது தொழிலைப் பிரமன் தொடங்கும் பொழுது மறந்திடப்
பிழைகள் படவே எடுபடும் உயிர் கெடுக ணமெனப் பெருகின
கருணை நிறையும் உமைதன் மகனைக் கனிவொடு குறை யிறைஞ்சிடக்
கடிய தடையும் நொடியில் பொடியக் கருதும் செயலும் முடிந்தது
உருவக் களிறு பெரிய வயிறு கணப தியருட் பெருமையை
உணர உணர உணரும் உயிரும் உயர உயர உயருமே!


No comments:

Post a Comment