உள்ளமெனும்
அன்னமதன் மீது - கலை
ஊர்தியென நீயமரும் போது -மனம்
உலவும் திசை பலவும் நிலவும் உனதருளை
உள்ளும் தமிழ் விள்ளும்
ஊர்தியென நீயமரும் போது -மனம்
உலவும் திசை பலவும் நிலவும் உனதருளை
உள்ளும் தமிழ் விள்ளும்
வெள்ளமென
நீபொழிந்தாய் அன்று - பெரும்
வேந்தனென நான் திரிந்தேன் வென்று - கணம்
விரையும் வரையிலுமுன் விரியும் அருள்தினமும்
மீண்டும் வர வேண்டும்
வேந்தனென நான் திரிந்தேன் வென்று - கணம்
விரையும் வரையிலுமுன் விரியும் அருள்தினமும்
மீண்டும் வர வேண்டும்
காதலுடன்
ஆழிமறை பாடும் - புலர்
காலையில் அலைகளெலாம் ஆடும் - இருள்
கரையும் மறையும் தினம் பறவை உனையழைத்துக்
கரையும் கதிர் விரையும்
காலையில் அலைகளெலாம் ஆடும் - இருள்
கரையும் மறையும் தினம் பறவை உனையழைத்துக்
கரையும் கதிர் விரையும்
ஆதியுலகம்
முழுதும் பள்ளி - கல்வி
யார்தருவார் உன்னையன்றி அள்ளி - உன்
அருளில் தெருளுமுயிர் பெருகும் அறிவுபெறல்
ஆகும் மடம் போகும்
யார்தருவார் உன்னையன்றி அள்ளி - உன்
அருளில் தெருளுமுயிர் பெருகும் அறிவுபெறல்
ஆகும் மடம் போகும்
உன்விரலில்
நாதலயம் வாழும் - அதன்
ஊடுறையும் மேவுசுரம் ஏழும் -எழும்
ஒலியின் தலைவியென உலகின் மொழிபலவும்
உன்னால் வரும் முன்னால்
ஊடுறையும் மேவுசுரம் ஏழும் -எழும்
ஒலியின் தலைவியென உலகின் மொழிபலவும்
உன்னால் வரும் முன்னால்
மின்னலென
வேண்டும் அருள் வாக்கு- அந்த
வித்தகத்தை என்னில் உருவாக்கு -கொடும்
விதிக்கும் விதிக்கும் மதி பதிக்கும் உனதுவரம்
விருப்பம் தரும் திருப்பம்
வித்தகத்தை என்னில் உருவாக்கு -கொடும்
விதிக்கும் விதிக்கும் மதி பதிக்கும் உனதுவரம்
விருப்பம் தரும் திருப்பம்
ஆயகலை
அத்தனைக்கும் தேவி - உனை
அண்டுகிறோம் உன்பெயரைக் கூவி - உன்
அடியின் பிடியை இனி விடுவதிலை தருவாய்
ஆக்கம் மிக ஊக்கம்
அண்டுகிறோம் உன்பெயரைக் கூவி - உன்
அடியின் பிடியை இனி விடுவதிலை தருவாய்
ஆக்கம் மிக ஊக்கம்
மாயவலை
சிக்கியுள ஈனம் - தனை
வாட்டி ஒளி நல்கிடுவாய் ஞானம் -இனி
வருதல், தருதல் வளம் பெறுதல் அனைத்துமுன்றன்
வரமே உன் பரமே!
வாட்டி ஒளி நல்கிடுவாய் ஞானம் -இனி
வருதல், தருதல் வளம் பெறுதல் அனைத்துமுன்றன்
வரமே உன் பரமே!
இலந்தை
8- 10-2016

No comments:
Post a Comment