கொள்கலம் தந்திடு
அறுசீர் விருத்தம்
வெள்ளலைக் கைகளை வீசிய டித்திடும்
மேலெதிர் வாரிதியில்
தள்ளிடும் ஓர்கலம் சஞ்சலம்
நீங்கியே சார்வதும் எப்படியோ?
உள்ள மெனுங்கடல் ஓங்கும
லையிடை உந்துதல் எத்தனையோ?
கொள்கலம் தந்திடு கூட்டிய
ணைத்திடு குன்றமர் கோமகனே!
No comments:
Post a Comment