வாராகி நடுவெழுத்தலங்காரம்
பல விகற்ப நேரிசை வெண்பா
நதிமீன் மணம்மீன்தாய் மன்மதன் நன்றே
பதியூறு காய்படையில் வாழ்க்கை- துதிசெய்
பனிவல்லல் கல்லமை கான்நமை மாடு
பசுவிமை என்றே பகர்.
பதியூறு காய்படையில் வாழ்க்கை- துதிசெய்
பனிவல்லல் கல்லமை கான்நமை மாடு
பசுவிமை என்றே பகர்.
சொல் பிரதி
நடு முதல் கடை
நதி
பவானி வா பனி
மீன்
வரால் ரா வல்
மணம் அகில் கி அல்
மீன்
கயல் ய கல்
தாய்
அம்மை ம் அமை
மன்மதன் காமன்
ம கான்
நன்றே நன்மை .ன் நமை
ஊறுகாய் மாவடு வ
மாடு
படை பரசு ர பசு
இல்வாழ்க்கை இம்மை ம் இமை
படை பரசு ர பசு
இல்வாழ்க்கை இம்மை ம் இமை
வாராகியம்மன் வரம்
இன்னொரு வகை
நதிமீன் மணம் மீன் தாய் மன்மதன் நன்றே
பதியூறு காய்படையில் வாழ்க்கை – துதிசெய்தே
ஆராய்ந்து மத்தி யமையப் பெறுவோமே
வாராகி யம்மன் வரம்
பதியூறு காய்படையில் வாழ்க்கை – துதிசெய்தே
ஆராய்ந்து மத்தி யமையப் பெறுவோமே
வாராகி யம்மன் வரம்
(அடுத்தடுத்து வரும் சொற்களின் பொருளில்
நடுவெழுத்துகளைத் தொகுக்க வரும் சொற்றொடர் நடுவெழுத்தலங்காரம். எ.கா நதி – பவானி என்பது ஒரு நதி அதன் நடுவெழுத்து வா. இப்படி மற்றச் சொற்களின் பொருளின்
நடுவெழுத்தைத் தொகுத்தால் (வாராகி அம்மன் வரம்) என்று வரும் .
முதல் வெண்பாவில் நடுவெழுத்தை எடுத்து விட்டால்
விஞ்சும் சொற்கள் என்னென்ன என்பதை மூன்றாவது நான்காவது அடிகளில் காணலாம்
இரண்டாவது வெண்பா ஆராய்ந்து மத்தி
யெழுத்துகளைச் சேர்த்தால் “வாராகி யம்மன் வரம்” என்று வரும் என்று சொல்கிறது
No comments:
Post a Comment