Saturday, May 11, 2019

எண்ணம் சிறக்க அருள்


எண்ணம் சிறக்க அருள்

எண்ணத்திலே எழும் சிந்தனைகள் ஆயிரம்
       எழுதவோ முடிவதில்லை
      எண்ணத்திலே எழும் சிந்தனை சிற்சில
      எழுதிடும் போது மற்றோர்
எண்ணத்திலே புகுந்தீர்த்திடும் இந்திர
      ஜாலத்தைத் தேறவில்லை
      எங்கேயோ மூலையில் தோன்றிடும் சிறுபொறி
      என்னையே தீய்க்கும் என்றே
எண்ணத்தைச் சொற்களில் வடிக்கிறேன் வடித்ததை
       இங்குநான் எழுதுகின்றேன்
      என்னையே என்சொலில் இழைக்கின்ற தன்மையை
      என்றனுக் கருளிஉள்ளத்
திண்ணையிலே எழும் சிந்தனை யாவையும்
       சிறந்ததாய் அமையும் வழியே
       செய்யப்பனே, நலம் பெய்யப்பனே உயர்
       தெய்வமே அய்யப்பனே!


No comments:

Post a Comment