Saturday, May 11, 2019

ஐயப்பன் காவடிச் சிந்து


ஐயப்பன் காவடிச்சிந்து

ஞான நாதனைக் காண வேண்டுமேல்
நாட்டுக அருட் தாகம் - பதம்
நாடுவார்க் கிலை சோகம்- அட
நண்ணுமோ வெறும் மோகம் - அவன்
நாடும் அன்பர்கள் கேடறச் செயும்
நல்ல மாமழை மேகம்

பாதகம் தனை மோதி மாய்த்திடப்
பந்தளம் வளர் ஐயன் - அரி
பரமனின் எழில் பையன் - நமைப்
பாதுகாத்திடும் கையன்- படி
பத்தொ டெட்டதன் மேலமர்ந்தருள்
பாலிக்கும் அருள் மெய்யன்

சபரி மாமலை மீதமர்ந்தருள்
தந்திடும்  ஒளி ஜோதி - ஐயன்
சாற்றி வைத்தவை நீதி- அவன்
சத்தியப் பெயர் ஓதி - பதம்
சரண மென்றவர் மரணமஞ்சிடார்
சாருமோ எம பீதி?

காட்டுப் பாதையில் ஏறிச் செல்கையில்
கால்களில் வலு ஏறும்- மனம்
கட்டுக்குள் இளைப்பாறும்- மணி
கண்டனின் பெயர் கூறும் - கொடும்
காமக் குரோதமும் லோப மோகமும்
கண்ணியத்துளே மாறும்

சாமியே சரண் என்னவே பதம்
சாருவார் இனம் ஒன்றே - கொடும்
சாதி பேதமே வென்றே- ஐயன்
சத்திய வழி நின்றே-அந்தச்
சாந்த மூர்த்தியைக் காணுவார் உயர்
சபரிமாமலை சென்றே!

காந்த மாமலை மீதில் ஜோதியாய்க்
காட்சி கண்டிட லாகும்- கூட்டம்
காணக் கோடியாய்ப் போகும்- கண்டால்
கண்ணில் நீர்வழிந் தேகும் - மிகக்
கட்டுப்பாட்டொடு காலடி தொழ
கால பாபமும் வேகும்.

No comments:

Post a Comment