தேடி
வருவாள் திரு
நேரிசை வெண்பா
வாழ்ந்திரு நெஞ்சில், மலர்மகள் பாதத்தில்
தாழ்ந்திரு, பின்னர்த் தளராமல் - ஆழ்ந்திரு
நாடி விரும்பும்
நலமெல்லாம் தானளிக்கத்
தேடி வருவாள் திரு.
அக்கிரமக் காரர்களை
ஆர்த்தழிக்கப் போர்க்கோல
உக்கிரம் கொள்ளும்
ஒருத்தியிங்கே – அக்கரையாய்
பார்த்துப்பார்த் தன்பு
பரிகின்றாள், அன்னையவள்
வார்த்தை கடந்திடும்
வான்.
No comments:
Post a Comment