வாராகி
பஞ்சகம்
யாரா கிலும்தம் அவதிகள்
நீங்க ,
அகம்கனிந்தே
வாராகி பாதம் வணங்கிட
அன்னார் மனவிழைவைத்
தாராதி ராள்அன்பில்
தாங்கா திராள்தன் தயவுவிழி
பாராதி ராள்உள் பரிவாய்
இருக்கின்ற பஞ்சமியே! 1
பஞ்சமி, பைரவி , பாசாங் குசைஉள் பரிந்தளிக்கக்
கஞ்சமி லாதாள் கருடனில் ஏறிக் ககனமெலாம்
விஞ்சை யுலாவரு வித்தகி, வாராஹி, வேண்டியடி
தஞ்ச மெனவரு வோர்தமைத்
தாங்கும் தயாபரியே! 2
பரியேறு வாள்,சினம் பாய்ந்து வருகிற பாரிசத்தில்
அரியேறு வாள் எரு
மையேறு வாள், முன் அதிரவரும்
கரியேறு வாள்,வன் புலியேறு வாள்எதிர் காய்பவரை
எரியேறச் செய்தே
எழுவாள் நடிப்பாள் எதிர்நிற்பளே! 3
நின்றால் நிலமதி ரும்
வெறி கொண்டே நிகழ்பொருவில்
சென்றால் மலையதி
ரும்தனைத் தாக்கும் செறுநர்களைக்
கொன்றா லலாது
கொதிப்படங் காதாள் குறித்ததனை
வென்றா லலாது விடாள், பகை வீழ்த்துவள் வேரறுத்தே! 4
வேரறத் தோண்டிடும் ஏன
முகத்தாள் மிகவிரும்பிச்
சேரரறம் காத்திடும்
தேவதை,
மிக்கத் தெளிவளித்தே
சோர விடாதொரு சொற்போ
ரிடைநமைத் தூக்கிவைக்கும்
ஆரருள் வாராஹி
அம்மையின் பாதம் அடைக்கலமே 5
No comments:
Post a Comment