நவராத்திரி
அன்னை தேவி அருள்நவ ராத்திரி
அண்டம் நோக ஆர்ப்பரித் தாடினோன்
தன்னை இன்னும் தாங்குதல்
தீதெனத்
தண்டம் செய்யச் சாடி எழுந்தனள்
கொன்று போட்டுக் குவலயம்
காத்தனள்
குற்றம் செய்வோன் கோமகன் ஆயினும்
அன்னை காட்டும் அறவழி பற்றுவோம்
ஆல காலம் நாட்படப் பார்ப்பதோ?
ஆல காலம் நாட்படப் பார்ப்பதோ?
No comments:
Post a Comment