கருமாரி
பதினான்கு சீர் விருத்தம்
நாகவுரு வானவள், மேகநிற மேனியள்
ஞாலம் புரக்கின்றவள்
நடமாடுகின்றவள், படமாடுகின்றவள்
நாதம் வடிக்கின்றவள்
யாகமெனும் வாழ்விலே ஆராத
அன்பினை
அள்ளிக் குடிக்கின்றவள்
அச்சங்கள் யாவையும் துச்சமாய்ப் போக்கியே
ஆக்கம் விளைவிப்பவள்
வேகமருள் கின்றவள் வேதமருள்கின்றவள்
வேற்காடு வாழ்கின்றவள்
விரிநீறு திருநீறு வியனருள் சாம்பலால்
விந்தை புரிகின்றவள்
ஊகமாய் இல்லாமல் உறவாடுகின்றவள்
ஊக்கம் தருகின்றவள்
ஓங்காரி ரீங்காரி ஆங்காரி அம்மையின்
ஒண்பாதம் போற்றி போற்றி!
No comments:
Post a Comment