ஆகா தம்மா
பிடிவாதம்
தொழுது கேட்டேன் உன்நெஞ்சம்
துழவிப் பார்க்க இயலவில்லை
அழுது கேட்டேன் அம்மாநீ
அசைய வில்லை என்னிடத்தில்
பழுதாய் என்ன கண்டாய்நீ
பழு திருந்தால் தவிர்ப்பாயோ?
எழுதும் போதில் பிரவாகம்
இறங்கச் செய்வாய் கலைவாணி!
துழவிப் பார்க்க இயலவில்லை
அழுது கேட்டேன் அம்மாநீ
அசைய வில்லை என்னிடத்தில்
பழுதாய் என்ன கண்டாய்நீ
பழு திருந்தால் தவிர்ப்பாயோ?
எழுதும் போதில் பிரவாகம்
இறங்கச் செய்வாய் கலைவாணி!
முன்னைச் செயல்கள் மறந்தாயோ
மூடன் என்றே நினைந்தாயோ
பின்னும் பின்னும் பேசிவந்த
பிள்ளை இவனைத் துறந்தாயோ?
அன்னை பிள்ளை உறவுக்குள்
ஆகா தம்மா பிடிவாதம்
மின்னல் வீச்சை அருள்வாயே
வேகம் விவேகம் தருவாயே!
மூடன் என்றே நினைந்தாயோ
பின்னும் பின்னும் பேசிவந்த
பிள்ளை இவனைத் துறந்தாயோ?
அன்னை பிள்ளை உறவுக்குள்
ஆகா தம்மா பிடிவாதம்
மின்னல் வீச்சை அருள்வாயே
வேகம் விவேகம் தருவாயே!
No comments:
Post a Comment