2 என்னைக் களிமண்ணாய் மாற்றிவிட்டேன் -அதனில்
ஏற்புநீர் ஊற்றி உன்பால் போட்டுவிட்டேன்
அன்னையே புவனேசீ நீயொரு கலையரசி
என்னையென்ன செய்வதென்ன கொஞ்சமாய் நீயோசி
உன்கரத் தால்பிசைந்தே உருக்கொடுப்பாய் - அம்மா
உன்னதம் உன்னதம் என்றெவரும்சொல
மின்னலை ஓடவிட்டே ஒளிகொடுப்பாய் - உன்றன்
வித்தகம் காட்டியதில் உயிர்கொடுப்பாய்
கையிலே குழந்தையாய் எனையெடுத்தே - அம்மா
கவிதைப்பால் ஊட்டியே எனைவளர்த்தே
வையகம் வாழவே உனைப்பாடவே- தாயே
வரங்கொடுப்பாய் நல்ல வளம்கொடுப்பாய் - அம்மா
ஏற்புநீர் ஊற்றி உன்பால் போட்டுவிட்டேன்
அன்னையே புவனேசீ நீயொரு கலையரசி
என்னையென்ன செய்வதென்ன கொஞ்சமாய் நீயோசி
உன்கரத் தால்பிசைந்தே உருக்கொடுப்பாய் - அம்மா
உன்னதம் உன்னதம் என்றெவரும்சொல
மின்னலை ஓடவிட்டே ஒளிகொடுப்பாய் - உன்றன்
வித்தகம் காட்டியதில் உயிர்கொடுப்பாய்
கையிலே குழந்தையாய் எனையெடுத்தே - அம்மா
கவிதைப்பால் ஊட்டியே எனைவளர்த்தே
வையகம் வாழவே உனைப்பாடவே- தாயே
வரங்கொடுப்பாய் நல்ல வளம்கொடுப்பாய் - அம்மா
No comments:
Post a Comment