1 என்ன நடக்கிறது எனைச் சுற்றியே - அம்மா
எதுவும் தெரியவில்லை எனைப்பற்றியே
இன்னும் இரகசியமும் அவசியமா- அம்மா
எனக்கு மட்டும் சொல்லிவிடு இரகசியமா
எதுவும் தெரியவில்லை எனைப்பற்றியே
இன்னும் இரகசியமும் அவசியமா- அம்மா
எனக்கு மட்டும் சொல்லிவிடு இரகசியமா
பெண்களிடம் இரகசியங்கள்
தங்குவதில்லை -அந்தப்
பேச்சு, பிழை ஆகிடுதல் அழகல்லவே
பேச்சு, பிழை ஆகிடுதல் அழகல்லவே
மண்ணகத்தில் வரவழைத்தாய்
வளர்க்கின்றாய்- இங்கே
வந்தவன்யார் என்பதையேன் மறைக்கின்றாய்?
வந்தவன்யார் என்பதையேன் மறைக்கின்றாய்?
என்னைநான் உணரும்படி
ஒருவார்த்தை- அம்மா
என்னிடத்தில் சொல்லிவிடு புவனேஸ்வரி
உன்னைநான் அறியவில்லை , என்பிழையா? - “நான்யார்”
உண்மையை மறைப்பதுதான் உன்வழியா?
என்னிடத்தில் சொல்லிவிடு புவனேஸ்வரி
உன்னைநான் அறியவில்லை , என்பிழையா? - “நான்யார்”
உண்மையை மறைப்பதுதான் உன்வழியா?
ஓரெழுத்தில் உறைபவளே,
ஸ்ரீம் காரி - அதை
உரைக்கத் தருகிறாய்நீ அருள்வாரி
நேரெழுத்தை என்மனத்தில் எழுதிவிடு - அதை
நின்னிடத்தே அர்ப்பணிக்கும் மனதுகொடு - தாயே
உரைக்கத் தருகிறாய்நீ அருள்வாரி
நேரெழுத்தை என்மனத்தில் எழுதிவிடு - அதை
நின்னிடத்தே அர்ப்பணிக்கும் மனதுகொடு - தாயே
No comments:
Post a Comment