Saturday, May 11, 2019

விஷ்ணு துர்கை சீவலப்பேரி


விஷ்ணு துர்கை சீவலப்பேரி

கும்மியடி பெண்ணே கும்மியடி மிகக்
       கோலாகலமாகக் கும்மியடி
அம்மைநம் விஷ்ணுதுர்க் கைபதம் போற்றியே
      ஆனந்த மாகவே கும்மியடி

காவல்தெய்வம் அவள் காத்திடுவாள்-நல்ல
       கல்வி, புகழ், செல்வம் சேர்த்திடுவாள்
சீவலப் பேரி வதிந்தருள் செய்திடும்
       தேவியைப் போற்றியே கும்மியடி.

சங்கரன் போற்றும் பரம்பொருளாம்- அவள்
      தாளைப் பணிய வரும் அருளாம்
மங்கலம் யாவும் கொடுத்திடுவாள்- வரும்
      வாதைகள் யாவும் தடுத்திடுவாள்
       
       ஞானம் கொடுப்பாள், நலம் கொடுப்பாள்- பக்தி
            நல்ல படி செய் வழிகொடுப்பாள்
       வானம் அடைந்திடும் போதினில் மீண்டுமே
            மண்ணில் பிறவா  வரம் கொடுப்பாள்.

No comments:

Post a Comment