Saturday, May 11, 2019

காந்திமதி


காந்திமதி
பல்லவி

நெல்லையில் அருள்புரியும் காந்திமதி - அம்மா
நின்னடி துதிக்கின்றோம் நீயன்றி ஏதுகதி?

அனுபல்லவி

இல்லையென்னும் சொல்லை இல்லையெனச் செய்வாய்
இயலிசை நாடகமும் என்னுள்ளே நீ பெய்வாய் - நெல்லையில்

சரணம்

வல்லமை யாவையும் நின்னருள் வரமன்றோ?
வழங்கிட நீகணிப்பாய் பக்தியின் தரமன்றோ?
எல்லையில்லா வெளியில் எங்கும் நிறைபவளே
ஏழை மனப் பேழையிலே என்றும் உறைபவளே! - நெல்லையில்

No comments:

Post a Comment