Tuesday, May 14, 2019

என்னொரு சொல்லால்


என்னொரு சொல்லால்

என்னொரு சொல்லால் இன்னொரு மனிதன் இன்னல் தீர்க்கக் கூடுமேல்
என்னொரு சொல்லால் இன்னொரு படியில் ஏற ஒருவர்க் கேலுமேல்
என்னுடை எண்ணம் இன்னொரு மனத்தில் எழுச்சி யூட்டக் கூடுமேல்
என்வரம் அதுதான் எனக்கவ் வெல்லாம்  இறைவா, தரநீ கடவாயே!

என்னொரு சொல்லால் வஞ்சகப் பேயை எரித்துக் காட்ட வேண்டுமே
என்னொரு செயலால் பொறிபடு பொட்டல் எழிலாய் மாற வேண்டுமே
என்னுடை எண்ணம் மண்பயனுறவே எதுவும் படைக்க வேண்டுமே
என்வரம் அதுதான் இறைவா எனக்கவ் வெல்லாம் தரநீ கடவாயே!

No comments:

Post a Comment