என்னொரு சொல்லால்
என்னொரு சொல்லால் இன்னொரு மனிதன் இன்னல் தீர்க்கக் கூடுமேல்
என்னொரு சொல்லால் இன்னொரு படியில் ஏற ஒருவர்க் கேலுமேல்
என்னுடை எண்ணம் இன்னொரு மனத்தில் எழுச்சி யூட்டக் கூடுமேல்
என்வரம் அதுதான் எனக்கவ் வெல்லாம் இறைவா, தரநீ கடவாயே!
என்னொரு சொல்லால் வஞ்சகப் பேயை எரித்துக் காட்ட வேண்டுமே
என்னொரு செயலால் பொறிபடு பொட்டல் எழிலாய் மாற வேண்டுமே
என்னுடை எண்ணம் மண்பயனுறவே எதுவும் படைக்க வேண்டுமே
என்வரம் அதுதான் இறைவா எனக்கவ் வெல்லாம் தரநீ கடவாயே!
No comments:
Post a Comment