தூதனின் திருப்பதமே
தூதனின் திருப்பதமே-ராம
தூதனின் திருப்பதமே-மனமே
துதித்தெழு நீதினமே-இதமே (தூதனின்)
ஆதவனிடம் கற்றான்
யாவையும்
வரப்பெற்றான்
மாதவம்
தனில் உற்றான்
மாசெதுவும்
அற்றான்
கல்வி
அவன் தருவான்
கனிவுடனே
வருவான்
கதிதரும்
செல்வங்கள்
கனமழையாய்ச்
சொரிவான் (தூதனின்)
உள்ளதெல்லாம் அவன் உபகாரம்-அவன்
உள்ளிருக்கப்
போகும் அகங்காரம்
வள்ளலுடன்
வந்த அவதாரம்-இந்த
வாழ்வினுக்
கவன்தானே ஆதாரம் (தூதனின்)
ராம்நகரில்
அவனின் விஸ்வரூபம்-அவன்
நம்மிடம்
கொள்ளுகிறான் அனுதாபம்
நாம்
பணிந்தால் கிட்டுவது வெகுலாபம்-அந்த
ராமன்
அவன் நெஞ்சில் ஒளிர்தீபம் (தூதனின்)
மருந்தைக் கொணர்ந்தவன்
மாமேதை- நம்
மாருதிக்
கருளினள் தாய்சீதை
விருந்தில்
இராமனுடன் ஓரிலையில்- உண்ட
வீரன் அகற்றிடுவான் நம் வாதை (தூதனின்)
வீரன் அகற்றிடுவான் நம் வாதை (தூதனின்)
No comments:
Post a Comment