நட நட நட
நட
நடநட நடநட நடநட
நமது தெய்வ வேலைப் போற்றி
நட நட
கடந்து செல்லும் பாதை தன்னில்
கண்ணாய் ஒளியைத் தருபவன்
கந்தன் வேலன் குகனைப் பாடிக்
காட்டில் மேட்டில் நட நட
தடங்கல் இல்லை தளர்ச்சியில்லை
சலிப்பும் மலைப்பும் இல்லையே
சாமி முருகன் துணை யிருக்கச்
சற்றும் இல்லை தொல்லையே!
சந்தம் பாடித் தமிழைப் பாடி
சரவணனைப் போற்றியே
சிந்தையெல்லாம் அவன்நி னைவில்
சேர்ந்து பொங்கி நட நட
வாட்டுகின்ற பனியும் வாசம்
மல்கும் பன்னீராகவே
கூட்டு கின்ற குமரன் பாதம்
குழைந்து போற்றி நட நட
பேசப் பேச வாய் மணக்கும்
பேதம் நெஞ்சில் இல்லையே
மாசு தோன்றா நெஞ்சில் முருகன்
மஹிமை கூடும் நடநட
முத்தும் மணியும் பொன்னும்
கொண்டு
முன்னிழைத்த போதிலும்
அத்தன் முருகன் அதனைப் பாரான்
அகத்தைப் பார்ப்பான் நடநட
நட நட நட நட நட நட
நமது தெய்வ வேலைப் போற்றி
நட நட
No comments:
Post a Comment