Friday, May 10, 2019

வளமே உறும்நம் வசம்


வளமே உறும் நம் வசம்

நேரிசை வெண்பா

இதுவோ அதுவோ  எதுவோ எனவே
துதிவே றிலாது தொழவே அதுவே
தருவான் முருகன் தனிவே லரசன்
வருவான் மனங்கொள் வகை

வகையுளி இன்றி வதியும் கவியாய்
தகவளி வேலனின் தாளை- அகமே
கொளவே வருமே குறையா நலமே
வளமே உறும்நம் வசம்

No comments:

Post a Comment