காமாட்சி
கண்ணிகள்
காமாட்சியாம் காமாட்சி
காஞ்சிபுரம் காமாட்சி
நாமாட்சிகள் செய்யவே
நடத்தி வைப்பாள் காமாட்சி
காமம் தன்னை ஆண்டவள்
கரும்பு வில்லைப் பூண்டவள்
நேம மாகத் தவத்திலே
நித்ய சக்தி மூண்டவள்
நித்தம் பூக்கும் ஆதவன்
நெற்றி யாகத் தோதவன்
சக்தியிவள் உறவிலே
தமையன் ஆவான் மாதவன்
கையில் ஐந்து பூவினாள்
கானம் பூத்த நாவினாள்
வையம் என்றும் வாழவே
வாழ்வில் ஜீவன் தூவினாள்!
No comments:
Post a Comment