Friday, May 10, 2019

காஞ்சீபுரம் காமாட்சி


காமாட்சி
கண்ணிகள்

காமாட்சியாம் காமாட்சி
        காஞ்சிபுரம் காமாட்சி
நாமாட்சிகள் செய்யவே
        நடத்தி வைப்பாள் காமாட்சி

காமம் தன்னை ஆண்டவள்
        கரும்பு வில்லைப் பூண்டவள்
நேம மாகத் தவத்திலே
        நித்ய சக்தி மூண்டவள்

நித்தம் பூக்கும் ஆதவன்
        நெற்றி யாகத் தோதவன்
சக்தியிவள் உறவிலே
        தமையன் ஆவான் மாதவன்

கையில் ஐந்து பூவினாள்
        கானம் பூத்த நாவினாள்
வையம் என்றும் வாழவே
        வாழ்வில் ஜீவன் தூவினாள்!

No comments:

Post a Comment