காசி விசாலாட்சி
பதினான்கு சீர் விருத்தம்
புனிதங்கள் யாவையும் தனதுளே
பொங்கியே
புண்ணியம் கூட்டும் பதி
போராடும் வினையெலாம் நீராடும் துறையிலே
போகத் தொலைக்கும் பதி
இனியொரு பிறவியும் இலையென
ஆக்கிடும்
ஏற்றங்கள் நாட்டும் பதி
எமனுக்கும் அஞ்சிடா இயல்பினைத் தந்திடும்
இங்கிதம் காட்டும் பதி
பனிதிகழ் கங்கையின் வடமுகப்
போக்கிலே
பவித்திரம் ஆகும் பதி
பரிவுடன் அப்பதி பதியுடன் அமர்ந்தருள்
பாலிக்கும் தேவ தேவி
கனிவுடன் காத்திடக் காத்திருக்
கின்றனை
கடைக்கண் அருள்நோக்கிலே
கருதிடும் முக்தியை உறுதிகள் செய்திடும்
காசி விசாலாட்சியே!
No comments:
Post a Comment