கன்னியாகுமரி
சமநிலைச் சிந்து
தெக்குப் பக்கம் நிக்கிறவ
யாருடா- தம்பி
தேவி கன்யா குமரி என்னும் பேருடா
அக்கிரமக் காரன்தன்னைக்
கொன்றவ- அவ
அன்னையாகக் கன்னியாக நின்றவ
வயிரக் கல்லு மூக்குத்தி
ஜொலிக்குது- கடல்
வாசலிலே அவள் பேரே ஒலிக்குது
தைரியமா வாழலாண்டா பாரிலே- நலம்
தழைக்குமடா அன்னையவள் பேரிலே
வண்ணவண்ண மாகமணல் காணுது- தேவி
மணம் மாறிப் போன கதை தோணுது
கண்ணெதிரே காட்சியெல்லாம்
தெரியுது- அந்தக்
காட்சியெலாம் அவளென்றே புரியுது
No comments:
Post a Comment