Friday, May 10, 2019

கன்னியாகுமரி


கன்னியாகுமரி

சமநிலைச் சிந்து

தெக்குப் பக்கம் நிக்கிறவ யாருடா- தம்பி
        தேவி கன்யா குமரி என்னும் பேருடா
அக்கிரமக் காரன்தன்னைக் கொன்றவ- அவ
        அன்னையாகக் கன்னியாக நின்றவ

வயிரக் கல்லு மூக்குத்தி ஜொலிக்குது- கடல்
        வாசலிலே அவள் பேரே ஒலிக்குது
தைரியமா வாழலாண்டா பாரிலே- நலம்
        தழைக்குமடா அன்னையவள் பேரிலே

வண்ணவண்ண மாகமணல் காணுது- தேவி
        மணம் மாறிப் போன கதை தோணுது
கண்ணெதிரே காட்சியெல்லாம் தெரியுது- அந்தக்
       காட்சியெலாம் அவளென்றே புரியுது


No comments:

Post a Comment