ஆயர் பாடி வீதியிலே
சிந்து
ஆயர் பாடி வீதியிலே ஆடி
வருபவன் - கண்ணன
அற்புதமாய் வேய்ங்குழலில்
பாடல் தருபவன்
ஆடி வருபவன் - கண்ணன்
பாடல் தருபவன்
தீய ராக வந்த பேரைத் தேய்த்துக்
கொன்றவன் - கண்ணன்
தேடித் தேடி வெண்ணை தன்னைத்
திருடிக் தின்றவன்
தேய்த்துக் கொன்றவன் - கண்ணன்
திருடித் தின்றவன்
ஆளை யெங்கே என்னு முன்னே
ஓடி மறைபவன் - கண்ணன்
அங்கு மிங்கும் எங்குமாகக்
கூடி நிறைபவன்
ஓடி மறைபவன் - கண்ணன்
கூடி நிறைபவன்
நீலமேக வானம் போன்ற வண்ணம்
கொண்டவன் - கண்ணன்
நிலத்தில் வீழ்த்து வாய்புதைத்து
மண்ணை உண்டவன்
வண்ணம் கொண்டவன் - கண்ணன்
மண்ணை உண்டவன்
கட்டுவிர லால் மலையைக் குடைபிடித்தவன் - கண்ணன்
சூழ்ந்துவரும் பகையையெலாம்
பொடிபொடித்தவன்
குடை பிடித்தவன் - கண்ணன்
பொடி பொடித்தவன்
கட்டிவைத்த உரலைக் கொண்டு
மரங்கள் சாய்த்தவன் - கண்ணன்
காட்டினிலே தோழரோடு பசுக்கள்
மேய்த்தவன்
மரங்கள் சாய்த்தவன் - கண்ணன்
பசுக்கள் மேய்த்தவன்
தேவகிக்கு நன்மகனாய்ச் சிறையில்
பூத்தவன் - கண்ணன்
திரௌபதிக்கு சேலைதந்து முறையில்
காத்தவன்
சிறையில் பூத்தவன் - கண்ணன்
முறையில் காத்தவன்
குட்டி வாயில் அண்டம் காட்டி
விந்தை செய்தவன் - கண்ணன்
கோபியர்கள் தலையில் உள்ள
பூவைக் கொய்தவன்
விந்தை செய்தவன் - கண்ணன்
பூவைக் கொய்தவன்
கௌரவர்கள் நகரம் நோக்கித்
தூது நடந்தவன் - கண்ணன்
காலம் வெளி கோலம் எனும்
யாதும் கடந்தவன்
துhது நடந்தவன் - கண்ணன்
யாதும் கடந்தவன்
பாண்டவர்கள் வென்றிடவே பாதை
காட்டினான் - கண்ணன்
பார்த்தன் கவலை உற்ற போது
கீதை ஊட்டினான்
பாதை காட்டினான் - கண்ணன்
கீதை ஊட்டினான்
No comments:
Post a Comment