வாராத வள்ளலும் வந்தான்
ஆனந்தக் களிப்பு
வாராத வள்ளலும் வந்தான் – இங்கே
வாவெனச் சொல்லித் தரிசனம்
தந்தான்
புன்னகை காட்டி நல் நேசம் புரிவான்
கள்ளில் மயங்குவது போலே- நமைக்
கட்டி மயக்குவான் தன் பார்வை யாலே
என்ன அழகடி கண்ணன் – அவன்
இந்தச் சிலையில் வெண் சந்தன வண்ணன்
மன்னன் அவன் ஒயில் என்னே- ஒளி
வார்த்திடும் மேனியோ அற்புத மின்னே!
வைத்தகண் வாங்காமல் பார்த்தேன் – எழில்
வண்ணன் திருவடி என்மனம் சேர்த்தேன்
சத்தியம் வந்ததோ மண்ணில் – மனச்
சாந்தம் அளிக்குதோ இன்னிசைப் பண்ணில்
பார்க்கப் பரவசம் பாரீர்- அவன்
பாதம் பணிந்திட யாவரும் சேரீர்
ஈர்க்கும் அழகின் இமயம்- அவன்
என்னிடம் சிக்கினான் இந்தச் சமயம்
18-10-2015

No comments:
Post a Comment