சொர்க்கத்திடம் கிடைக்கும்
இணையென்று சொல்லவே இயலாத மந்திர
ஏற்றமே
காயத்திரி
எழுகின்ற
ஜோதியாய் எந்நாளும் காண்பதாய்
இருப்பது
காயத்திரி
அணைகொள்ள முடியாத ஐம்பூதம் ஓர்நெறி
ஆகிடும்
காயத்திரி
அணியாக
வேதத்தின் மணியாக அடியவர்க்கு
அருளாகும்
காயத்திரி
புணையாக வாழ்வதன் பொருளாக நேர்ந்திடும்
புனிதமும்
காயத்திரி
புரியாத
காலத்தும் புரிந்திடத் தூண்டிடும்
புண்ணியம்
காயத்திரி
துணையாக, தொழும்பாக,
சுடராகப் பொங்கிடும்
ஜோதியே
காயத்திரி
ஜோதியைப்
போற்றுவோம் அறிவினைத் தூண்டுவோம்
சொர்க்கத்
திடம் கிடைக்கும்!
No comments:
Post a Comment