வாராகி பள்ளு
ஓடிவரும் தேர்ச்சத்தம் காதில்கேட்குதே -அதன்
உள்ளமர்ந்த வாராகி பேரொலிக்குதே
கூடவரும் யோகினிகள் ஆட்டம் காண்குதே- எதோ
உள்ளமர்ந்த வாராகி பேரொலிக்குதே
கூடவரும் யோகினிகள் ஆட்டம் காண்குதே- எதோ
கொண்டாட்டம் போட்டுவரும்
வேட்டு மீறுதே
பாடிவரும் தேவதைகள் நாதம் கேட்குதே – வரும்
பாதையெல்லாம் ஒளிவெள்ளம் பளபளக்குதே
நாடிவரும் படைதிரண்டே அணிவகுக்குதே-இது
நாடகமா நாட்டியமா, எனை மயக்குதே!
பாடிவரும் தேவதைகள் நாதம் கேட்குதே – வரும்
பாதையெல்லாம் ஒளிவெள்ளம் பளபளக்குதே
நாடிவரும் படைதிரண்டே அணிவகுக்குதே-இது
நாடகமா நாட்டியமா, எனை மயக்குதே!
கோடையிடி போலொலியும் குலைநடுக்குதே- களம்
கூத்தாடும் பேய்க்கூட்டம் கெக்கலிக்குதே
சாடிவரும் எதிரியணி துடிதுடிக்குதே- கிரி
சக்கரத்தின் தோற்றமெங்கும் தடதடக்குதே
கூடுமலை மீதெகிறி ரதம் கடக்குதே – அதைக்
கொடியவர்கள் கூட்டம் கண்டு கிடுகிடுக்குதே!
பாடிவரும் பக்தர்களின் படை நடக்குதே – அன்னை
பரவசமாய் முறுவலிக்க அருள்கிடைக்குதே!
கூத்தாடும் பேய்க்கூட்டம் கெக்கலிக்குதே
சாடிவரும் எதிரியணி துடிதுடிக்குதே- கிரி
சக்கரத்தின் தோற்றமெங்கும் தடதடக்குதே
கூடுமலை மீதெகிறி ரதம் கடக்குதே – அதைக்
கொடியவர்கள் கூட்டம் கண்டு கிடுகிடுக்குதே!
பாடிவரும் பக்தர்களின் படை நடக்குதே – அன்னை
பரவசமாய் முறுவலிக்க அருள்கிடைக்குதே!
No comments:
Post a Comment