எண்ணத்தில் தீபம் ஏற்றுங்கள்- ஜோதி
எண்ணத்தில் தீபம் ஏற்றுங்கள்- ஜோதி
ஏற்றிடும் ஐயனைப் போற்றுங்கள் - எண்ணத்தில்
ஏற்றிடும் ஐயனைப் போற்றுங்கள் - எண்ணத்தில்
கண்ணுக்குள் பார்வை அவன் ஜோதி- இந்தக்
காசினியில் ஓங்கும் அவன் நீதி
பண்ணுக்குள் ராகம் அவன் மோனம் – அவன்
பார்வையில் கிட்டும் பெரும் ஞானம். - எண்ணத்தில்
காசினியில் ஓங்கும் அவன் நீதி
பண்ணுக்குள் ராகம் அவன் மோனம் – அவன்
பார்வையில் கிட்டும் பெரும் ஞானம். - எண்ணத்தில்
அபயம் அளிப்பது அவன் கரமே – நலம்
யாவும் கொடுக்கும் அவன் கரமே
சபரி கிரிமுடி அவன் வீடு- அவன்
தங்குவதோ அன்பர் மனக்கூடு - எண்ணத்தில்
யாவும் கொடுக்கும் அவன் கரமே
சபரி கிரிமுடி அவன் வீடு- அவன்
தங்குவதோ அன்பர் மனக்கூடு - எண்ணத்தில்
காட்டில் ஒலிப்பது அவன் கீதம்- நெஞ்சம்
காட்டும் சரணம் எனும் நாதம்
ஊற்றுப் பெருக்காய் உறவாகும் – பக்தி
உள்ளம் உருக்கும் நிறைவாகும் - எண்ணத்தில்
காட்டும் சரணம் எனும் நாதம்
ஊற்றுப் பெருக்காய் உறவாகும் – பக்தி
உள்ளம் உருக்கும் நிறைவாகும் - எண்ணத்தில்
No comments:
Post a Comment