Saturday, May 11, 2019

சிகரம் தொடவைப்பாய்


சிகரம் தொடவைப்பாய்

சமநிலைச் சிந்து

பூமி தனில் விழுந்தேன் - அழுதேன்
        புன்னகை நீபுரிந்தாய்
ஆமந்த நாள்முதலாய்- எனக்கோர்
        ஆதர  வாயிருந்தாய்

வண்ணங்கள் இன்னவென- எனக்கு
        வகுத்து நீயுரைத்தாய்
எண்ணங்கள் தோன்றுமுனே- ஒலிவகை
        எத்தனை நீவிரித்தாய்!

கைவிரல் தான்விரித்து- அந்தநாள்
        கணக்குப் போடாமல்
மெய்வகை காட்டுவித்தாய்- அம்மநான்
        விடைகள் தேடாமல்

சந்தம் படிக்குமுன்னே- அதனைத்
        தாளில் வடித்துவிட்டேன்
எந்த வகையினிலும் - மரபில்
        எண்ணம் பிடித்துவிட்டேன்

உன்றன் அருளிலையேல்- எழுத்தில்
        ஒன்றும் நடக்காது
அன்னை கலைவாணி-- உன்னருள்
        யாது கொடுக்காது?

அள்ளிக் கொடுப்பதற்கே- தகுமா
        அம்மா இடைவெளிகள்
வெள்ளமெனப் பொழிவாய் - அருள்வாய்
        வேகம் கவியொளிகள்

நாள்கள் அதிகமில்லை- பெரிதாய்
        நல்லருள் செய்யம்மா
தோள்கள் சுருங்குமுனே- சிகரம்
        தொட்டிட வையம்மா!

No comments:

Post a Comment