சிகரம் தொடவைப்பாய்
சமநிலைச் சிந்து
பூமி தனில் விழுந்தேன் - அழுதேன்
புன்னகை நீபுரிந்தாய்
ஆமந்த நாள்முதலாய்- எனக்கோர்
ஆதர
வாயிருந்தாய்
வண்ணங்கள் இன்னவென- எனக்கு
வகுத்து நீயுரைத்தாய்
எண்ணங்கள் தோன்றுமுனே- ஒலிவகை
எத்தனை நீவிரித்தாய்!
கைவிரல் தான்விரித்து- அந்தநாள்
கணக்குப் போடாமல்
மெய்வகை காட்டுவித்தாய்- அம்மநான்
விடைகள் தேடாமல்
சந்தம் படிக்குமுன்னே- அதனைத்
தாளில் வடித்துவிட்டேன்
எந்த வகையினிலும் - மரபில்
எண்ணம் பிடித்துவிட்டேன்
உன்றன் அருளிலையேல்- எழுத்தில்
ஒன்றும் நடக்காது
அன்னை கலைவாணி-- உன்னருள்
யாது கொடுக்காது?
அள்ளிக் கொடுப்பதற்கே- தகுமா
அம்மா இடைவெளிகள்
வெள்ளமெனப் பொழிவாய் - அருள்வாய்
வேகம் கவியொளிகள்
நாள்கள் அதிகமில்லை- பெரிதாய்
நல்லருள் செய்யம்மா
தோள்கள் சுருங்குமுனே- சிகரம்
தொட்டிட வையம்மா!
No comments:
Post a Comment