Saturday, May 11, 2019

கமலம் வாழ் கலைத்தெய்வமே


கமலம்வாழ் கலைத்தெய்வமே
              
             பல்லவி
கமலம்வாழ் கலைத்தெய்வமேஉனைக்
களிகூர்ந்து நலம்பெறவே சேவித்து நின்றேனே
             அனுபல்லவி
அமளிகள் நிறைமனத்தில் அமைதியைத் தருவாயே
அனுதினம் உனைநினை மனநிலை அருள்வாயே
             சரணம்
அறிவினைத் தெளியவை, அகத்திலே ஒளியைவை
      அரியவை தெரியவை அருஞ்செயல் புரியவை
குறிப்புகள் அறியவை  குணநலம் நிறையவை
       கொள்கையில் பிடிப்புவை, கொண்டதை  முடித்துவை

நல்லதை நிறைத்துவை அல்லதை மறைத்துவை
       நடப்பதைச் சிறக்கவை ஞானத்தை உறைக்கவை
செல்வத்தை வெல்லவை, நல்லசொல் சொல்லவை
        தினந்தினம் வளர்ந்திடும் புதுமைகள் சொல்லிவை


No comments:

Post a Comment