வெள்ளமெனப் பொழிவாய்!
சிந்து
கள்ளமிலா மனம் கண்டு வதிந்திடும்
கான இசைக் கலையே-உயர்
கல்வி தரு நிலையே
வள்ளல் இவன் தரு வார்த்தைதனில்
வரும் வாழ்த்துப் பலிக்குமென-ஒளி
வந்து கொழிக்குமென
பள்ள முறைந்திடு பாமரரும்
சொலும் பட்டயமே பெறவே-நலம்
பாவினிலே உறவே
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப்
பொழி,
வெள்ளமெனப் பொழியே!
எள்ளி நகைத்தவர் ஏளனம் செய்தவர்
எண்ணி வருந்திடவே-என்னுள்
ஏற்றம் இருந்திடவே
உள்ள மனைத்திலும் உன்திரு
மந்திரம் ஓங்கி நிலைத்திடவே-கவி
ஓடிச் சலித்திடவே
தெள்ளு தமிழ்மொழி தேனருவிப்
புனல் துள்ளி வரும்படியே-சுவை
அள்ளித்தரும் படியே
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப்
பொழி
வெள்ளமெனப் பொழியே!
முள்ளின் முனைதரு கூர்மை
எனவரு
மோனை நடம்பெறவேஅதில்
வானம் இடம்பெறவே
கள்ளை,விரைந்திடு காற்றை, புனலினை,
தீயைக் கடைந்தெடுத்தே-சொல்
தேவப் படை தொடுத்தே
அள்ளப் பெருகிடும் ஆற்றல்
அதிசயம்
நாவில் பெரும் பொருளை-உன்
நல்ல திருவருளை
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப்
பொழி
வெள்ளமெனப் பொழியே!
பிள்ளைப் பருவத்தில் உள்ளம்
கவர்ந்தெனைப்
பேசிட வைத்தவளே-கவி
வீசிட மொய்த்தவளே
தெள்ளத் தெளியத் தெளியாதன
பல
தேர்ந்திடச் செய்தவளே-ஒளி
ஆர்ந்திடப் பெய்தவளே
தள்ளி யிருப்பதும் தாய்க்கழ
கில்லையே
சார்ந்தென்றன் நாவினிலே-நான்
சாற்றிடும் பாவினிலே
வெள்ளமெனப் பொழி, வெள்ளமெனப் பொழி,
வெள்ளமெனப் பொழியே!
No comments:
Post a Comment