வாராகி
திருத்தசாங்கம்.
காப்பு
வாராகி அம்மை வளர்திருத்த சாங்கமிது
சீராய் அமைந்து சிறந்திடவே- நேராக
நின்னருளை நல்கிடுக நேசக் கணபதியே
கன்னல்பா வுக்குநீ காப்பு.
நூல்
1 பெயர்
பச்சைப் பசுங்கிளியே, பார்த்துப் பழந்தின்னும்
மெச்சுபுகழ்ப் புள்ளழகே, வீரமுடன்- இச்சகத்தை
எச்சரிக்கை யாய்க்காக்கும் எம்தேவி பேரென்ன?
உச்சரிப்பாய் வாராகி யே!
மெச்சுபுகழ்ப் புள்ளழகே, வீரமுடன்- இச்சகத்தை
எச்சரிக்கை யாய்க்காக்கும் எம்தேவி பேரென்ன?
உச்சரிப்பாய் வாராகி யே!
2 நாடு
வட்டமாய் ஆரம் வனைந்த கழுத்துடையாய்
மட்டில்லா நம்முடைய வாராகி – இட்டமுடன்
வாழுகிற நாடெதுவோ, வாயுரைப்பாய் பைங்கிளியே,
சூழுமிவ் வண்டமெனச் சொல்.
3 ஊர்-
பூங்காவில் வாழும் புதுக்கிளியே, எம்மன்னை
பாங்காய் அமரும் பதியெதுவோ?- நீங்காத
பத்தி மனங்கொள்ளும் பக்தர்கள் உள்ளங்கள்
சக்திவா ராகியின் ஊர்
மட்டில்லா நம்முடைய வாராகி – இட்டமுடன்
வாழுகிற நாடெதுவோ, வாயுரைப்பாய் பைங்கிளியே,
சூழுமிவ் வண்டமெனச் சொல்.
3 ஊர்-
பூங்காவில் வாழும் புதுக்கிளியே, எம்மன்னை
பாங்காய் அமரும் பதியெதுவோ?- நீங்காத
பத்தி மனங்கொள்ளும் பக்தர்கள் உள்ளங்கள்
சக்திவா ராகியின் ஊர்
4 நதி
மரகதப் பச்சையாம் வண்ணமெழில் கொண்ட
தரமுடைய கிள்ளாய்நீ சாற்று – வரமருளும்
வாகான வாராகி மாண்பு நதியெதுவோ
ஆகாச கங்கை அறி
தரமுடைய கிள்ளாய்நீ சாற்று – வரமருளும்
வாகான வாராகி மாண்பு நதியெதுவோ
ஆகாச கங்கை அறி
5 மலை
அஞ்சுகமே, பேசும் அழகே,எம் வாராகி
விஞ்சும் மலையை விளம்புகநீ- நெஞ்சம்
கலையாத வெற்றியே கையகத் தாக்கும்
மலையாத வீர மலை.
6 தேர்
செம்மை அலகுடைய தேன்மொழியே, வாராகி
அம்மை ரதமெதுசொல் ஆய்ந்தேநீ - வெம்மைமிகு
போர்க்களத் தேபகைவர் புன்மனத்தில் அச்சத்தைச்
சேர்க்கும் கிரிசக்ரத் தேர்.
விஞ்சும் மலையை விளம்புகநீ- நெஞ்சம்
கலையாத வெற்றியே கையகத் தாக்கும்
மலையாத வீர மலை.
6 தேர்
செம்மை அலகுடைய தேன்மொழியே, வாராகி
அம்மை ரதமெதுசொல் ஆய்ந்தேநீ - வெம்மைமிகு
போர்க்களத் தேபகைவர் புன்மனத்தில் அச்சத்தைச்
சேர்க்கும் கிரிசக்ரத் தேர்.
7 வாகனம்
பேசும்பொற் சித்திரமே பீடு
மிகுந்திருக்கும்
ஆசைப் பசுங்கிளியே, அம்மையும் – நேசமாய்
ஏறுகின்ற வாகனம் ஏதுரைப்பாய்- மேதியெனக்
கூறும் எருமையெனக் கொள்.
ஆசைப் பசுங்கிளியே, அம்மையும் – நேசமாய்
ஏறுகின்ற வாகனம் ஏதுரைப்பாய்- மேதியெனக்
கூறும் எருமையெனக் கொள்.
8 படை
கிஞ்சுகமே, கொஞ்சுகிற கிள்ளையே, மாற்றாரை
அஞ்சவைக்கும் அன்னை படையெதுவோ- விஞ்சிக்
கலக்குகிற வாராகி கைப்படையே நீண்ட
உலக்கைப் படையென் றுரை.
9 தார்
பஞ்சுச் சிறகினிலே பச்சை இழைகிளியே
விஞ்சைமிகும் வாராகி தாருரைப்பாய் – மஞ்சள்
இழைத்த பசுவண்ணம் ஏறிவறி மாறு
தழைக்கும் எழில்மஞ்சள் தார்
அஞ்சவைக்கும் அன்னை படையெதுவோ- விஞ்சிக்
கலக்குகிற வாராகி கைப்படையே நீண்ட
உலக்கைப் படையென் றுரை.
9 தார்
பஞ்சுச் சிறகினிலே பச்சை இழைகிளியே
விஞ்சைமிகும் வாராகி தாருரைப்பாய் – மஞ்சள்
இழைத்த பசுவண்ணம் ஏறிவறி மாறு
தழைக்கும் எழில்மஞ்சள் தார்
10 கொடி
அன்னைநம் வாராகி
யாதுகொடி வைத்துள்ளாள்
சின்னஞ் சிறுகிளியே செப்புவாய் – என்றைக்கும்
ஆசிதரும் ஏற்றமுள அம்மை திருத்தேரின்
வாசியாம் வெற்றிக் கொடி.
சின்னஞ் சிறுகிளியே செப்புவாய் – என்றைக்கும்
ஆசிதரும் ஏற்றமுள அம்மை திருத்தேரின்
வாசியாம் வெற்றிக் கொடி.
நூற்பயன்
இந்தத் திருத்தசாங்
கத்தை மனம்கொண்டு
வந்தித்துப் போற்றி வணங்கிடுவோர்- சந்ததமும்
அன்னை அருளால் அகமகிழ வாழ்ந்திடுவார்
உன்னதமாய் வாழ்வார் உயர்ந்து.
வந்தித்துப் போற்றி வணங்கிடுவோர்- சந்ததமும்
அன்னை அருளால் அகமகிழ வாழ்ந்திடுவார்
உன்னதமாய் வாழ்வார் உயர்ந்து.
No comments:
Post a Comment