Friday, May 10, 2019

குருவாக ஓடி வருவான்


குருவாக ஓடி வருவான்

எண்சீர் விருத்தம்

ஒருநாமம் சொல்லி அந்த ஒருதேவைப் போற்றி
உயர்வான பக்தி திகழ
வருநாளை எல்லாம் நெஞ்சில் திருநாளாய் எண்ணி
மனதார ஒன்றி மகிழ
ஒருநாதன், அன்னை தந்தை உருவாக ஞான
குருவாக ஓடி வருவான்
சரியான வேளை வந்து தளரரது காத்துத்
தகவான முக்தி தருவான்

No comments:

Post a Comment