நெல்லையப்பன் பதமே
பல்லவி
நெல்லையப்பன் பதமே- மனமே
நீ துதிப்பாய் தினமே இதமே!
அனுபல்லவி
கல்வி அவன்தருவான்
காளையின் மேல் வருவான்
கதிதரும் செல்வங்கள்
கனமழையாய்ச் சொரிவான் நெல்லை
சரணம்
உள்ளதெலாம் அவன் உபகாரம் - அவன்
உள்ளிருக்கப் போகும் அகங்காரம்
வெள்ளம் எனப்பொங்கும் அருளன்றோ- அவன்
விழிதரக் கிடைப்பது
பொருளன்றோ!
No comments:
Post a Comment