Friday, May 10, 2019

அத்வைதம்

அத்வைதம்
எண்சீர் விருத்தம்

ஏனோ நெஞ்சே, எனைவாட் டுகிறாய்?
        ஏதோ ஒன்றை நினைவூட் டுகிறாய்
யானோ என்னுள் அடங்கிக் கிடந்தேன்
        யாவும் நீக்கி  அறிந்து நடந்தேன்
ஆனால் நீயோ  அவனைத் துறந்தாய்
        யாரா தாரம், அதனை மறந்தாய்
நானார் நீயார் நடுவே அவனார்
        நானும் நீயும் அவனும் சிவனார்.

No comments:

Post a Comment