அத்வைதம்
எண்சீர் விருத்தம்
ஏனோ நெஞ்சே, எனைவாட் டுகிறாய்?
ஏதோ ஒன்றை நினைவூட் டுகிறாய்
யானோ என்னுள் அடங்கிக் கிடந்தேன்
யாவும் நீக்கி அறிந்து நடந்தேன்
ஆனால் நீயோ அவனைத்
துறந்தாய்
யாரா தாரம், அதனை மறந்தாய்
நானார் நீயார் நடுவே அவனார்
நானும் நீயும் அவனும் சிவனார்.
No comments:
Post a Comment