சீதை
அறுசீர் விருத்தம்
கங்கைக்குள் ஓர் இமயம், கனலுக்குள் ஓர்குளுமை, கனிந்து கொண்ட
நுங்குக்குள் ஓர்வைரம், நுட்பத்தில் போர்முரசு, , வெண்மை பூத்த
சங்குக்குள் ஓர்நாதம், சாந்தத்தில் ஓர்சாட்டை, தழல்படுத்த
தங்கத்துள் ஓர்வீச்சு, சத்தியத்தின் உயிர்மூச்சு, தாயே சீதை
No comments:
Post a Comment