Sunday, May 12, 2019

வாராகி அனுக்கிரக ஸ்தவம்



வாராகி அனுக்கிரக ஸ்தவம்
           
( மொழியாக்கம் – இலந்தை சு இராமசாமி)

1 நீநிற அல்லி நிறத்தவ, நிறைந்த முகுட பயங்கரி
  ஆன உலக்கை கலப்பையை ஆயுத மாகத் தரித்தவ
,
  மேனிலை பக்தர்க் கருள்பவ
, மெலியிடை, நீல விழியினாய்
  ஏன வதனி
, கனதன எழிலினாய், போற்றிஓம்  போற்றியே!     

2 அடியவர் துன்பம் பயநிலை அகமுறும் தீய பிசாசுகள்  
  வடிவறு முண்டம் பிணமென யாவும் தகர்த்தே ஒழிப்பவ
,
  தடையறு செல்வம் அருள்பவ
, சமரில் பகையினை வெல்பவ
  நடமிடும் அண்டம் இயக்கிடும் நாயகி போற்றிஓம்  போற்றியே!     

3  தனது நி யில் அமர்ந்துநீ சார்ந்தவர் தம்மைப் புரக்கிறாய்
  கனமனத் தாக்கம்
, அஞ்சுதல், பரபரப் புள்ள பிணிநிலை
  நினதருள் நீக்கிப் புரந்திட நின்னடி யார்முன் பகைவரைக்
  கனலாய் எரித்துத் தகர்க்கிறாய்
, கருணையே போற்றிஓம்- 
போற்றியே

 
4  சமர்விளை யாட்டா பந்தடித் தாடிடும் ஒன்றா என்னவே
  அமர்விளை யாடும் அம்மையே அணியுலக் கையால் வேகமாய்
  இமைத்திடும் முன்னர் வீழ்த்தியே ஏர்கலப் பையால் உழுகிறாய்
  அமைவிரை தன்மை  என்சொல
? அம்மையே போற்றிஓம் 
போற்றியே

 
5 அன்னாய் நிலைக்கும் இடத்தினாய் அருமென் கரத்தின்           
  விசையினால்

  முன்னும், வலமும் இடமும்பின் எங்கணும் சுற்றி அடிப்பதை
  பின்னரும் சற்றே தளர்த்தியே பிழையுணர் கின்ற பகைவரை
  இன்னரும் அன்பால் புரந்திடும் அம்மையே
, போற்றிஓம் 
  போற்றியே! 
 தன்னிடம் நின்று சமர்செயும் தரியலர் தம்மைத் தகர்க்கிறாய்
  முன்னர் உதிரம் குடிக்கிறாய் மதுவுண் டுயிரை அளிக்கிறாய்
  முன்புரள் நீண்ட முடியினாய் சண்டமுண் டா முன்  னிருக்கிறார்
  அன்னை பலியை விரும்புவாய் உன்பதம் போற்றிஓம் போற்றியே
!

No comments:

Post a Comment