Saturday, May 11, 2019

தர்மம் காத்த கர்ம வீரன்


தர்மம் காத்த கர்ம வீரன்
வஞ்சித்துறை

மண்ணில் வந்த
அண்ணல் இராமன்
விண்ணை இங்கே
கண்ணில் தந்தான்

தந்தை சொல்லைச்
சிந்தை கொண்டான்
முந்தும் தீயர்
மந்தை மாய்த்தான்

வர்மம் கொண்ட
மர்மப் போரில்
தர்மம் காத்த
கர்ம வீரன்

ஓர்வில் ஓரில்
ஓர்சொல் என்ற
தேர்வில் வென்ற
பேர்சொல் மேலோன்

நேம மோடு
சேம மாச்சு
பூமி மீது
ராம ராஜ்யம்

No comments:

Post a Comment