தர்மம் காத்த கர்ம வீரன்
வஞ்சித்துறை
மண்ணில் வந்த
அண்ணல் இராமன்
விண்ணை இங்கே
கண்ணில் தந்தான்
தந்தை சொல்லைச்
சிந்தை கொண்டான்
முந்தும் தீயர்
மந்தை மாய்த்தான்
வர்மம் கொண்ட
மர்மப் போரில்
தர்மம் காத்த
கர்ம வீரன்
ஓர்வில் ஓரில்
ஓர்சொல் என்ற
தேர்வில் வென்ற
பேர்சொல் மேலோன்
நேம மோடு
சேம மாச்சு
பூமி மீது
ராம ராஜ்யம்
No comments:
Post a Comment