Saturday, May 11, 2019

eவரும் செல்ல முடியாது


எவரும் செல்ல முடியாது
அறுசீர் விருத்தம்

உராயும் எண்ணச் சூட்டுக்குள்
      உலாவிச் செல்லும் இவ்வாழ்வில்
பராவி யாரோ பெரியவரின்
      பாதை பற்றிச் செல்வமென
நிராசை யின்றிச் சென்றிடலாம்
      நினைவில் கூடக் காகுத்தன்
இராமன் பாதை பின்பற்றி
      எவரும் செல்ல முடியாது

பண்புக் கூட்டம் அவன்வீட்டுப்
      படியில் இருந்து தவம்செய்யும்
எண்ண உறுதி முன்னாலே
      இமயம் இடியும், உண்மையிலே
அண்ணல் இராமன் பெயர்சொன்னால்
      அடுப்புப் புகையும், தெய்வதமாய்
விண்ணில் முக்தி வீட்டில்நம்
      விலாசம் போட்டு வைத்திருக்கும்!



No comments:

Post a Comment