Friday, May 10, 2019

உன்னருள் வேண்டும் உடன்


உன்னருள் வேண்டும் உடன்

நேரிசை வெண்பா

அம்மா புவனேசி ஆண்டாள் நகரரசி
எம்மால் இனித்துயரம் ஏலாது-  நம்பியுனை
நானுணர்ந்து வேண்டுகிறேன், நன்றாய்ப் பிணிதீர்ப்பாய்
ஈனம் புரியேன் இனி.

சொல்மறந்தேன் முன்சொன்ன சூள்மறந்தேன் அம்மாநான்
பொல்லாங்கு செய்திங்கே போக்கொழிந்தேன்  வல்லாய்நீ
மன்னித்துக் காத்திடுவாய்  வாட்டும் பிணிதீர்ப்பாய்
உன்னருள் வேண்டும் உடன்.


No comments:

Post a Comment