அறுமுகன் ஊஞ்சல்
ஊஞ்சலிது ஊஞ்சலிது
ஒய்யார ஊஞ்சல்
ஒப்பில்லாத் திருமுருகன் ஆடுகிற ஊஞ்சல்
வாஞ்சையுடன் பார்வதியாள் ஆட்டுகிற ஊஞ்சல்
மாதேவன் கைபிடித்தே இயக்குகிற ஊஞ்சல்
தீஞ்சுவைசேர் கானமங்கே கின்னரர்கள் பாட
தேவானை வள்ளியுடன் கந்தனமர் ஊஞ்சல்
ஆங்குமயில் சேவலொடு வேல்சேர்ந்தி ருக்க
அகிலாண்டம் அத்தனையும் போய்த்திரும்பும் ஊஞ்சல்
ஒப்பில்லாத் திருமுருகன் ஆடுகிற ஊஞ்சல்
வாஞ்சையுடன் பார்வதியாள் ஆட்டுகிற ஊஞ்சல்
மாதேவன் கைபிடித்தே இயக்குகிற ஊஞ்சல்
தீஞ்சுவைசேர் கானமங்கே கின்னரர்கள் பாட
தேவானை வள்ளியுடன் கந்தனமர் ஊஞ்சல்
ஆங்குமயில் சேவலொடு வேல்சேர்ந்தி ருக்க
அகிலாண்டம் அத்தனையும் போய்த்திரும்பும் ஊஞ்சல்
காலமெல்லாம் ஓய்வின்றி
ஆடுகிற ஊஞ்சல்
கந்தன்வள்ளி தெய்வானை களிக்கின்ற ஊஞ்சல்
கோலவிழி மாதர்பலர் கொண்டாடிப் போற்றிக்
கொண்டுவந்து பிடி சுற்றிப் போடுகிற ஊஞ்சல்
சீலமுறு லாலியிசை வாணிவந்து பாட
திருமகளும் கைதட்டி ஆடுகிற ஊஞ்சல்
சூலமுடை காளியவள் சுந்தரியாய் வந்து
சுந்தரனாம் முருகனுக்கு வாழ்த்துரைக்கும் ஊஞ்சல்
கந்தருவர் நாரதரும் வாத்திய மிசைக்கக்
கணபதியார் இயக்குகிற கானமுயர் ஊஞ்சல்
இந்திரன் தன் தேவியுடன் இழுத்தாட்டும் ஊஞ்சல்
எண்ணற்ற இயக்கர்களும் மேருவிலிருந்தே
வந்தவர்கள் யோகினிகள் வரிந்தாட்டும் ஊஞ்சல்
வாகான நவ வீர்ர் வரவேற்கும் ஊஞ்சல்
இந்தவகை இத்தனைபேர் என்றிசைக்கா வண்ணம்
இருக்கின்ற தேவரெலாம் இயக்குகின்ற ஊஞ்சல்
கந்தன்வள்ளி தெய்வானை களிக்கின்ற ஊஞ்சல்
கோலவிழி மாதர்பலர் கொண்டாடிப் போற்றிக்
கொண்டுவந்து பிடி சுற்றிப் போடுகிற ஊஞ்சல்
சீலமுறு லாலியிசை வாணிவந்து பாட
திருமகளும் கைதட்டி ஆடுகிற ஊஞ்சல்
சூலமுடை காளியவள் சுந்தரியாய் வந்து
சுந்தரனாம் முருகனுக்கு வாழ்த்துரைக்கும் ஊஞ்சல்
கந்தருவர் நாரதரும் வாத்திய மிசைக்கக்
கணபதியார் இயக்குகிற கானமுயர் ஊஞ்சல்
இந்திரன் தன் தேவியுடன் இழுத்தாட்டும் ஊஞ்சல்
எண்ணற்ற இயக்கர்களும் மேருவிலிருந்தே
வந்தவர்கள் யோகினிகள் வரிந்தாட்டும் ஊஞ்சல்
வாகான நவ வீர்ர் வரவேற்கும் ஊஞ்சல்
இந்தவகை இத்தனைபேர் என்றிசைக்கா வண்ணம்
இருக்கின்ற தேவரெலாம் இயக்குகின்ற ஊஞ்சல்
இடைவெளியே இல்லாமல்
எழுந்தாடும் ஊஞ்சல்
எழில்மருகன் தனைத் திருமால் இசைந்தாட்டும் ஊஞ்சல்
அடைமழையாய்த் திருப்புகழைத் தொடராக அங்கே
அருணகிரி பாடவரும் அழகான ஊஞ்சல்
உடையவனைச் சீராட்டி வந்தவர்கட் கெல்லாம்
உம்பர்தருத் தேனுமணி பரிசளிக்கும் ஊஞ்சல்
எழில்மருகன் தனைத் திருமால் இசைந்தாட்டும் ஊஞ்சல்
அடைமழையாய்த் திருப்புகழைத் தொடராக அங்கே
அருணகிரி பாடவரும் அழகான ஊஞ்சல்
உடையவனைச் சீராட்டி வந்தவர்கட் கெல்லாம்
உம்பர்தருத் தேனுமணி பரிசளிக்கும் ஊஞ்சல்
மடைதிறந்த வெள்ளம்போல்
பிரமன் மறை யோத
மறையவர்கள் வாழ்த்துகிற மாபெரிய ஊஞ்சல்
முப்பத்து முக்கோடி தேவர்களும் நின்று
முறைமுறையே கண்ணூறு கழிக்கின்ற ஊஞ்சல்
அப்பக்கம் வீரபத்ரன் ஐயப்பன் காக்க
அகிலாண்ட நாயகியாள் அருள்கொடுக்கும் ஊஞ்சல்
ஒப்பற்ற நாதஸ்வரம் மங்கலவாத் யங்கள்
ஒலிகானம் பின்பற்றி ஊதுகிற ஊஞ்சல்
அப்பப்பா இதைப்போல எங்குமிலை யென்றே
அரம்பையரும் பல்லாண்டு பாடுகிற ஊஞ்சல்
( ஊஞ்சலிது..)
நூற்பலன்
மறையவர்கள் வாழ்த்துகிற மாபெரிய ஊஞ்சல்
முப்பத்து முக்கோடி தேவர்களும் நின்று
முறைமுறையே கண்ணூறு கழிக்கின்ற ஊஞ்சல்
அப்பக்கம் வீரபத்ரன் ஐயப்பன் காக்க
அகிலாண்ட நாயகியாள் அருள்கொடுக்கும் ஊஞ்சல்
ஒப்பற்ற நாதஸ்வரம் மங்கலவாத் யங்கள்
ஒலிகானம் பின்பற்றி ஊதுகிற ஊஞ்சல்
அப்பப்பா இதைப்போல எங்குமிலை யென்றே
அரம்பையரும் பல்லாண்டு பாடுகிற ஊஞ்சல்
( ஊஞ்சலிது..)
நூற்பலன்
ஆவலாய்த் தேவர்
அறுமுகனை ஆட்டுகிற
காவிய ஊஞ்சல் கவிபாட – மேவுகிற
வெவ்வினைகள் தீர்ந்துவிடும் மேலுலகம் சித்திக்கும்
எவ்விதத்தும் இன்பம் எழும்.
காவிய ஊஞ்சல் கவிபாட – மேவுகிற
வெவ்வினைகள் தீர்ந்துவிடும் மேலுலகம் சித்திக்கும்
எவ்விதத்தும் இன்பம் எழும்.
No comments:
Post a Comment