பாலாவுக்குப் பாமாலை
புத்தகம் அட்ச மாலை
பொருந்திடும்
இரண்டு கைகள்
பத்தரைக் காக்க வென்றே
பரிந்திடும்
அபயம் ஓர்கை
உத்தம மாக வேண்ட
உதவிடும்
வரத ஹஸ்தம்
இத்தனை வனப்பென் றேயாம்
இயம்பிட
அரியள் பாலா! 1
மூவுல கத்தும் காணா
மோகன
அழகுத் தெய்வம்
ஏவல்கள் எதுவா னாலும்
எளிதிலே
வீட்டும் தெய்வம்
காவலாய் அமையும் தெய்வம்
கன்னியாய் நம்மைக் காக்க
ஆவலாய் இருக்கும் தெய்வம்
ஆற்றலில்
மிகுந்த பாலா! 2
அண்டமும் குலுங்கும் வண்ணம்
அடர்திறல்
கர்ணீ ஏறிப்
பண்டனின் புதல்வர் வீயப்
பாலகி
யாய்ப்போ ரிட்டாள்
எண்டிசை அனைத்தும் சுற்றி
எதிரியைக்
கலக்கும் காட்சி
கண்டவர் வியந்தார், அன்னை
கட்டியே
அணைத்துக் கொண்டாள் 3
ஒன்பது வயதுக் கன்னி
உத்தமி,
பக்தர்க் குள்ள
புன்னறி யாமை போக்கிப்
புத்தறி
வூட்டும் தெய்வம்
தன்னருள் விளையாட்டாகத்
தந்திடும்
வாலைப் பெண்ணாள்
உன்னதத் தெய்வம் போற்றி
உயர்பதம்
போற்றி போற்றி 4
பாலா உன்றன் ஐம்க்லீம்சௌ
பழகும்
நாவில் சொல்லேறிக்
கோலா கலமாய் விளையாடும்
கொஞ்சிப்
பேசும் பெண்ணேநீ
மூலா தாரம் முதலாக
முடுக்கி
விட்டுச் சித்திகளில்
ஏலா தவையும் இயல்வனவாய்
இயங்க
வைப்பாய், காப்பாயே! 5
No comments:
Post a Comment