Friday, May 10, 2019

ஆயிமகமாயி


ஆயிமகமாயி

சிந்து

ஆயி மகமாயி  அவள் ஆயிரம் கண்ணுடையா
ஆங்காரப் பேய்களையும் அவள் அதட்டி ஒடுக்கிடுவா

நோயிலே பாயலிலே நாம் நொந்து கிடக்கையிலே
தாயென வந்திடுவா மாரியம்மா தாளாத் துயர் தொலைப்பா

கற்பனைக் காரியவ, மாரியம்மா, கற்பூர நாயகியாள்
காலம் நடத்துறவள் மாரியம்மா காட்சி கொடுக்கிறவள்
அற்புத மாகிறவள் மாரியம்மா யாவும் படைக்கிறவள்
ஆனந்தக் கூத்திடுவா மாரியம்மா ஆனந்தக் கூத்திடுவா


No comments:

Post a Comment