Saturday, May 11, 2019

அன்னையருள்


அன்னை அருள்

அன்னை அருளெனும் அற்புதத்தில் -இந்த
அண்ட மனைத்தும் இயங்குதடி-அவள்
மின்னும் விழியில் முகவொளியில்-இந்த
மேதினி யாவும் மயங்குதடி

ஊமை இசைப்பதும், கோழைகள் வீரமாய்
உற்சாகமாகக்  குதிப்பதுவும்
நாமம் அறியாதான் ஞானியாய் யாவரும்
நாடும் தெளிவை விதிப்பதுவும்

இப்படி ஈதென எப்படியோ - கணம்
எண்ணிப் பிரியக் கணிப்பதுவும்
ஒப்பில்லா தேவி களியாட்டு- செய்யும்
ஒவ்வொன்றும் அன்னை விளையாட்டு

No comments:

Post a Comment