வல்லமை தாராயோ?
சொல்லை நடத்துகிற
- தாயே
ஜோதிப் பரம்பொருளே
வல்லமை தாராயோ
- என்றன்
வார்த்தை பலித்திடவே!
மழையினை வாவென்றால்
- அது
வந்து பொழியட்டும்
மொழியில் செம்மொழியாய்த்-
தமிழை
முன்னம் மொழியட்டும்
என்சொல் கவிதையென
- உலகம்
ஏற்று மகிழட்டும்
இன்னும் இன்னும்
பெருமை- வந்தே
ஏற்றம் திகழட்டும்
தீவிர வாதமெல்லாம் நாட்டில்
தேய்ந்து மறையட்டும்-
காவிரி ஆற்றினிலே
-வெள்ளம்
கரைபுரண் டோடட்டும்
நலந்தரும் சொல்லெல்லாம்
- என்றன்
நாவில் பிறக்கட்டும்
இலந்தை நல்லவனே-
என்னும்
ஏற்றம் சிறக்கட்டும்.
No comments:
Post a Comment